lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 3
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 3 வைகறையின் செம்மை இனிது. மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க. உஷையை நாங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள் விழிப்புத் தருகின்றாள், தெளிவு தருகின்றாள், உயிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள், அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள். அவள் வாழ்க. அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது. அவள் அமுதம். அவள் இறப்ப தில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். வலிமைதான் அழகுடன் கலக்கும். இனிமை மிகவும் பெரிது. வட மேருவிலே பலவாகத்...